7 August 2016

ஜூலிபுளோரான்னா இனிமைதான் ,ஆனால் வலி :)

சிரிக்கலைன்னாலும்   குற்றம்  , சிரித்தாலுமா :)       
           ''துன்பம் வரும் வேளையில் சிரிக்கணும்னு பெண்டாட்டிகிட்டே சொன்னது தப்பா போச்சா ,ஏன்  ?''
            ''நான் வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் சிரிக்கிறாளே !''
 குடும்ப 'மனநல 'மருத்துவர் என்று  சொல்லக்கூடாதோ :)
               ''பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு  சொல்லிட்டு,இப்ப ஏன் வேண்டாங்கிறாங்க?''
              ''எங்க பரம்பரையைப் பற்றி ,எங்க பேமிலி மனநல டாக்டர்கிட்டே விசாரித்து பாருங்கன்னு சொன்னது தப்பாப் போச்சு !''

ஜூலிபுளோரான்னா  இனிமைதான்  ,ஆனால்  வலி :)
              ''ஜூலிபுளோரா குத்தின இடத்தில் இருந்து ரத்தம் கொட்டுதுன்னு சொல்றீங்களே ,அது யார் உங்க மனைவியா ?''
             ''அட நீங்க வேற ,சீமைக் கருவேல மரத்தின் விஞ்ஞான பெயர்தான் அது !''

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி தரும் போராட்டம் !
          ''ரயில் போறவரைக்கும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் ,இப்போ ரயிலுங்க வரிசையா நிற்குதே ,ஏன் ?''
           ''கேட் கீப்பர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி  ரயில் நிறுத்தும் போராட்டம் பண்றாங்களாம் !''

தாய் மனம் பூவினும் மெல்லியதா ?
   குரங்கு கூட ஈன்ற பின்னும்  தன் குட்டியை 
  தன்னுடனே சுமந்துக் கொண்டே திரிகிறது ...
  இதைப் பார்த்தபின்பும் பிறந்த சிசுவை குப்பையில் வீச 
  சில  'நாய் 'மார்களுக்கு எப்படி  மனசு வருகிறதோ ?

19 comments:

  1. தலைவலி வரும்போதெல்லாம் கண்ணாடி போடுவது போல!

    ஒரு வார்த்தை.. ஓஹோன்னு வாழ்க்கை!

    ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. தலை வலி போகும் ,இந்த துன்பம் நிரந்தரமாச்சே:)

      ஓகேன்னு சொன்னாதானே ஓஹோன்னு வாழ்க்கை :)

      Delete
  2. நீங்களும் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் இருந்தே சிரிக்க ஆரம்பித்து விடுகிறீர்களே...!

    ஒங்க பரம்பரையே இப்படித்தானா...?

    மனைவி ஜூலி உள்குத்து ரத்தம் வராது... ரத்தம் வந்தாலும் ஜூலிபுளோரா குத்தே பரவாயில்லை...!

    ‘கேட்’பாரற்று கேட் கிடக்க... வாகனங்கள் அணி வகுத்துச் செல்லட்டும்...!

    இதற்குத்தான் குரங்கு புத்தி வேணுமுன்னா... எந்த நாய் கேக்கிது...?!

    த.ம. 5





    ReplyDelete
    Replies
    1. சரியான மெண்டல் குடும்பமா இருக்கும் போலிருக்கே :)

      இது பரம்பரை மெண்டல் குடும்பமோ :)

      உள்குத்து தாங்க முடியாதோ :)

      இப்படி ரயில்கள் வரிசையா நின்றால் நல்லாத்தான் இருக்கும் :)

      குரங்கில் இருந்து வந்தாலும் குரங்கின் குணம் மறந்து போச்சே :)

      Delete
  3. உங்களையும் இடுக்கண்ணாகக் கருதுகிறார் போலும்
    இப்படியா போட்டுக் கொடுப்பது
    ஜூலிஃப்லோரான்னா கருவேலிமரமா
    வரிசையில் நிற்கும் அளவுக்கு ரயில்களா
    நாய்னா அவ்வளவு மோசமா

    ReplyDelete
    Replies
    1. நமக்கும் நடுக்கண் இருந்தால் இருந்தால் எரித்து விடலாம் இல்லையே என்ன செய்ய :)
      மனநலம் என்றாலே சந்தேகம்தானா :)
      உங்களாம் நம்ப முடியலையா :)
      பார்ப்பதற்கு அழகாய் இருக்கும் அல்லவா :)
      நாய் கூட பரவாயில்லைதானோ :)

      Delete
  4. 01. இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது.
    02. இதுவும் சூனியம்தான்.
    03. என்னோட கொழுந்தியாள் பெயர் ஞாபகம் வந்தது
    04. அவுங்களும் மனிதர்கள்தானே..
    05. உண்மைதான் ஜி

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் இப்படி செலவு செய்யாமல் இருக்கணும் :)
      இதையும் தவிர்க்கணுமோ:)
      அனேகமா அந்த பெயர் ஜாஸ்மின் ஆ :)
      ஓடமும் ஒருநாள் .....:)
      பத்து மாதம் சுமந்து தான் பெற்றார்களா:)

      Delete
  5. கடைசி வரிகள் செமத்தி அடி....சகோதரா.

    ReplyDelete
    Replies
    1. நெற்றி அடியில்லையா :)

      Delete
  6. ஹாஹாஹா! அனைத்தும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. பல் வரிசையும் தானே :)

      Delete
  7. Replies
    1. 'நாய் 'மார்கள் என்பதுதானே :)

      Delete
  8. உங்களின் மூன்றுக்கு நன்றி :)

    ReplyDelete
  9. பெற்ற குழந்தையை குப்பையில் வீசும் பெண்கள்.... சோகம்.

    ReplyDelete
    Replies
    1. அதை விட பெரிய சோகம் ,நீங்க இன்னும் இன்றைய பதிவுக்கு வராதது ஜி :)

      Delete
  10. எல்லா பதிவுகளும் நன்று

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அடுத்த பதிவை போடுங்க ஜி :)

      Delete