11 November 2013

தாயும் சேயும் செய்யும் ஒரே காரியம் ?

''தூளியிலே குழந்தை கத்தி கத்தி அழுவுறதைக்கூட கேட்காம உங்கம்மா ஹால்லே என்னடா பண்ணிக்கிட்டிருக்கா ?''
''டி வி மெகா சீரியலைப் பார்த்து அம்மா அழுதுகிட்டு இருக்காங்கப்பா !''

8 comments:

  1. ஹா.. ஹா... உண்மையை சொல்லும் நகைச்சுவை...

    ReplyDelete
    Replies
    1. வீட்டுக்கு வீடு வாசப் படிதானே ?
      நன்றி குமார் ஜி !

      Delete
  2. இப்போதெல்லாம் குழந்தைய தூங்க வைக்கவே டிவியை ஆன் செய்து விடுகிறார்களே

    ReplyDelete
    Replies
    1. இப்படி இரைச்சலில் வளரும் குழந்தை ,வளர்ந்த பின் கரைச்சல் செய்யாமல் என்ன செய்யும் ?
      நன்றி கண்ணதாசன் ஜி !

      Delete
  3. ஆகமொத்தத்துல அழுகாச்சி குடும்பம்னு சொல்லுங்க

    ReplyDelete
    Replies
    1. அழ வைக்கிறதுக்கு ஒன்பது சேனல்லே,எண்பது சீரியல் ,இந்த அழுகை எங்கே போய் முடியுமோ ?
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete
  4. அட ஆமாம் குழந்தையை விட இது எவ்வளவு முக்கியம்! :(

    ReplyDelete
    Replies
    1. குழந்தையைக் கூட மறுபடி பெத்துக்கலாம் ,சீரயலைப் பார்க்கலைன்னா மறுபடியும் பார்க்க முடியாதில்லே ?நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete