13 November 2013

அஞ்சு பெண்டாட்டியா ,அடி ஆத்தீ !

நான் அவனில்லை பட பாணியில்...
ஐந்து பெண்களைஏமாற்றி கல்யாணம் செய்து கொண்டதாக கைதாகி யுள்ளார்...
சினிமாப் பட டைரக்டர் ரவி தம்பி என்பவர் !
அவர் பத்தாவது படிக்கும் போதே ஒன்பதாவது படிக்கிறப் பெண்ணை காதலித்தாராம் ...

அந்தப் பெண்ணை கட்டிக்கிட்டு கை விட்டாரா ,இல்லை...
சும்மாவே கை விட்டாராவென்று தெரியவில்லை ...
படித்தது பத்தாவதுதான் என்றாலும் ...அரசியல்வாதிகளுக்கு 'டபுள் MA'வேலையும் பார்த்தவராம் ...
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு உள்நாட்டில் கூட வேலை வாங்கி தராமல் ஏமாற்றியும் உள்ளாராம் ...
நெய்யூர் என்ற ஊர்க்காரர் ஆகையால் பெண்களிடம் நெய்யாகப் பேசி ஏமாற்றியுள்ளார் ...
லட்சக்கணக்கில் வரதட்சணைப் பணத்தையும் ,சீர்வரிசை நகைகளையும் எடுத்துக் கொண்டு 'எஸ்கேப் 'ஆகி விடுவாராம் ...
இவர் இயக்கிய 'வாச்சாத்தி 'படத்தைப் பார்த்து சொல்லமுடிய விட்டாலும் ...
இவர் லீலைகளைப் பார்த்து சொல்ல முடிகிறது ..'அடி ஆத்தீ '...'
கடலும் கடல்சார்ந்த குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ...
ஆனால் உடலும் உடல் சார்ந்த விசயங்களை உள்ளடக்கியே படங்களை எடுத்தவர் ...
டெல்லி மாணவி பாலியல் பிரச்சினையை மையப் படுத்தி தற்போது இவர் எடுக்கும் படத்திற்க்கு பெயர் ...
தடை செய்யப்பட்ட இடமாம் ...
இப்போது இவரே தடை செய்யப்பட்ட இடத்திற்கு  சென்றுவிட்டார் ...
சினிமா மோகத்தால் இவரிடம் ஏமாந்தவர்களின் பட்டியல் இனியும் தொடரும் ...
ஏன் இப்படி செய்தீர்கள் என்று இவரிடம் கேட்டால் ...
சினிமாவில் வெற்றி பெறும் வரை எனக்கு பெண் தரத் தயங்கிய இந்த சமூகத்தை பழிவாங்கவே இத்தனை திருமணங்களை செய்துக் கொண்டேனென்று 'பூசி மொழுகுவார் '...
ஆரம்பக் காலத்தில் கொத்தனார் வேலைப் பார்த்தவர் ஆச்சே !




6 comments:

  1. இதே வேலையாக இருப்பார் போலிருக்கிறது. பெண்கள்தான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஐந்து கல்யாணம் முடியும் வரை வெளியே இவரைப் பற்றி தெரியவில்லை ,உண்மையில் திறமைசாலிதான் !
      நன்றி ஜெயகுமார் ஜி !

      Delete
  2. அப்ப ஆளு சகலகலா வல்லவனாக ஆசைப்பட்டாலும், உடலும், உடல் சார்ந்த பகுதிகளில் காண்பித்த, அளவுக்கு அதிகமான ஆவேசத்தால சகலா கலா மெய்யப்பன் ஆயிட்டாரோ!!.பகவான்ஜி....அவரோட ஊரு எது? நெய்யூரா? மெய்யூரா? பொய்யூரா?

    ReplyDelete
    Replies
    1. தற்போது அவர் இருப்பு ஜெயிலூர் !
      நன்றி கீதா மேடம் !

      Delete
  3. விதம் விதமாய் ஏமாற்றுவார் போல!

    ReplyDelete
    Replies
    1. சினிமா மோகம்தான் அவரை இந்த பாடுபடுத்தி இருக்கிறது !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete