1 January 2017

விசாரிக்காமல் பொண்ணைக் கொடுத்து விடுவதா :)

இதுக்கு முகத்திலே கரியைப் பூசிக்கவா  முடியும் :)
             ''நானொரு 'பிளாக்கர்'னு சொன்னா யாருமே நம்ப மாட்டேங்கிறாங்க !''
              ''இவ்வளவு  சிகப்பா இருந்துகிட்டு பிளாக்கர்னு சொன்னா எப்படி நம்ப முடியும் ?''

அடிச்சு விடுறதுக்கும் ஒரு அளவு வேணாமா :)
            ''என் பையன் எதிர்காலத்தில்  பெரிய ஞானியா வருவான்னு ஏன் சொல்றீங்க ?''
           ''புத்தரின் போதனைகள் என்று ,அவன் எழுதியிருப்பது எல்லாமே அவனோட போதனைகளா இருக்கே !'' 

மத்திய ஆட்சியாளர்களின் மனநிலை இப்படியிருக்கே:)
          ''புழக்கத்தில் இருக்கிற ரூபாய் நோட்டுக்களுக்குப் பதிலாய் புது நோட்டுக்கள் வந்தா, நல்லது தானே ?''
           ''ஆனால் அதில் காந்திக்குப் பதிலா கோட்சே படம் வந்தா ,நல்லாவா இருக்கும் ?''

விசாரிக்காமல் பொண்ணைக் கொடுத்து விடுவதா :)
             ''பண்ணையார் குடும்பம்னு சொன்னதை நம்பி பொண்ணு கொடுத்து ஏமாந்துட்டீங்களா  ,ஏன் ?''
             ''அவங்களிடம் இருப்பது பாம்பு பண்ணையாம் !''  
                      
இதுவரை எடுத்த சபதங்களில்  இதுதான் சூப்பர் :)
            '' இந்த புது வருசத்திலே 'ஸ்பெசல் 'சபதமா ,என்னது?''
             ''ஏற்கனவே எடுத்த  சபதங்களில் ,ஒன்றையாவது  இந்த வருசத்தில்  நிறைவேற்றணும்னுதான் !''

ஆபாசம் பெண்ணின் உடையிலா ,ஆணின் மனதிலா:)
       பெண்மை வீழ்க வென்று கூத்திடும் கயவர்கள் கூறும் காரணம் ...
       பெண்ணின் உடை கவர்ச்சியாம் !
       ஆணின் உடை கவர்ச்சி என்று எந்தப் பெண்ணாவது 
       ஆணை வன்புணர்ச்சி செய்த சான்று உண்டா ?

30 comments:

  1. அப்படீனாக்கா.... நான் ப்ளாக்கர் இல்லையா ?
    புத்தாண்டு வாழ்த்துகள் ஜி

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இல்லேன்னா யார் பிளாக்கர் :)
      வாழ்த்துக்கு நன்றி :)

      Delete
  2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நல்வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜி :)

      Delete
  3. நானொரு பிளாக்கருங்க... நானொரு பிளாக்கருங்க... ரொம்ப நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க... இப்ப ‘பிளாக் தண்டர்’க்கு போறேன்...!

    அவன் பேரு என்ன சித்தார்த்தனா...?!

    சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி... புது நோட்டு என்னை வாட்டுதம்மா... வங்கிகளைக் காட்டி... அத்தனையும் தாங்கிவிட்டேன்... ஏ.டி.எம். பூட்டி இருப்பதைப் பார்த்து...! சோதனை மேல் சோதனை போதுமடா...மாடசாமி...!

    ‘பாம்பே’யிலதான் எங்கள் பண்ணையார் வீடுன்னு வேற சொன்னீங்களே...! இந்தப் பாம்பே தானா...?! ‘ஆடு பாம்பே! விளையாடு பாம்பே! நின்றாடு பாம்பே! குதித்தாடு பாம்பே! எழுந்தாடு பாம்பே!’

    ‘எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே... உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே...’ எவன் என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறது...?!

    இதுக்குத்தான் இது போல ஆடை வேண்டான்னு சொன்னா ஒத்துக்கிறிங்களா...?! ‘ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான்... ஆதாம் ஏவாள் ஜோடிக்குப் பின்னே அடுத்த ஜோடி இது தான்...!’

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. ‘பிளாக் தண்டர்’க்கு தாராளமா போங்க ,பிளாக் ஹோலுக்கு போயிடாதீங்க :)

      'சின்ன' சித்தார்த்தன் :)

      atmக்கு வந்த சோதனையா இது :)

      என்னைக் கடிக்காம விடு பாம்பே :)

      சபதம் முடிப்பதற்குள் எமன் எசப் பாட்டு பாடாமல் போனால் சரி :)

      மற்ற ஜோடி எல்லாம் என்னவாம் ,செருப்பு ஜோடியா :)

      Delete
  4. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜி :)

      Delete
  5. அருமையான விருந்து

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு விருந்தாச்சே :)

      Delete
  6. ரசித்தேன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜி :)

      Delete
  7. புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி அய்யா :)

      Delete
  8. வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜி :)

    ReplyDelete
  9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ :)

      Delete
  10. ரசித்தோம் ஜி.

    புத்தாண்டு வாழ்த்துகள் ஜி

    ReplyDelete
  11. ரசித்தேன் ஜி. புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜி :)

      Delete
  12. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ :)

      Delete
  13. ரசித்தேன் ஜி.
    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜி :)

      Delete
  14. எப்படியாச்சு தள்ளி விடம்முன்னு நிணச்சு கொடுத்து இருப்பாங்க.....

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் இருக்குமோ :)

      Delete
  15. ''இவ்வளவு சிகப்பா இருந்துகிட்டு பிளாக்கர்னு சொன்னா எப்படி நம்ப முடியும் ?''//

    சிவப்பு பிளாக்கர்னு சொல்லலாமே!

    ReplyDelete
    Replies
    1. எழுதுற எல்லாமே சிகப்பு விளக்கு கதையா இருந்தால் அப்படியும் சொல்லலாம் :)

      Delete
  16. நானொரு ப்ளாகருங்க பதிவைப் படிக்கும் நாலு பேரு சொன்னாங்க நான் ஒரு ப்ளாகருங்க.
    அப்படி அவன் சொந்தமாக என்னதான் சொன்னானாம்
    ஏதோ பொடி இருப்பது போல் தெரிகிறதே
    கோழிப்பண்ணை என்று சொல்லி இருந்தால் நலமாக இருந்திருக்குமோ
    பதிவெழுதுவது இல்லை என்னும் சபதமா
    ஆண்கள் கவர்ச்சியாக இருப்பது எப்படி . பிறகுதானே மற்றதெல்லாம்

    ReplyDelete
    Replies
    1. நல்லா படிச்சிருந்தா அப்படி சொல்லியிருக்க மாட்டாங்களே :)
      நாலு பக்கத்துக்கு எழுதி இருப்பதில் எதைச் சொல்ல:)
      கோட்சேக்கு அவ்வளவு மரியாதை வந்து விட்டதே :)
      அதானே ,கொஞ்சம் கௌரவமா தெரியுதே :)
      ஆடிய காலைக் கூட ஆடாமல் நிறுத்திடலாம் ,கையைக் கட்டி போட முடியாதே :)
      அப்படின்னா ஆண் கவர்ச்சியாவே இல்லையா :)

      Delete