2 January 2017

கல்லறைதானே காதலின் சின்னம் :)

           ''கல்லறைப் பார்க்கப் போனாலும்  சில்லறை வேண்டுமா  ,ஏன்  ?''
           ''தாஜ்மகால் பார்க்க  நுழைவு கட்டணம் நாற்பது ரூபாயாச்சே!''

சிறப்பாக 'குடி'த்தனம் நடத்தும் தம்பதியர் :)
           ''யோவ் தரகரே ,உங்களுக்கே இது நியாயமா ?''
          ''எது ?''
          ''நான் குடிகாரங்கிறதை மறைத்து  கல்யாணத்தை முடிச்சு வைச்சீங்க சரி ...பொண்ணு ஃபுல்லை ஒரே  மடக்கிலே குடிப்பான்னு ஏன்  சொல்லலை !''
இந்த கொலையிலே நியாயம் இருக்கா :)
           ''பரோல்லெ  வெளியே போய் யாரைக் கொலைப் பண்ணிட்டு  வந்திருக்கே ?''
            '' அமோகமா வருவேன்னு ,எனக்கு பெயர் வைத்தவரைத்தான் போட்டுத் தள்ளிட்டுவந்தேன் !''

இவன் நமீதா ரசிகனாய் இருப்பானோ :)
            ''எதைச் நினைத்தாலும்  பெரிய அளவிலே செய்ய நினைக்கணும்னு ஏண்டா சொல்றே ?''
          ''குதிரைமேல் உட்காரலாம் ,குண்டூசி மேல் உட்கார முடியாதே !''

அளவிற்கு மீறினால் காபியும் போதைதான் :)
           ''என்னை ஏன் ,காபிக்கு அடிமைன்னு சொல்றே?''
            ''காப்பி நியூ இயர் 'ன்னு  வாழ்த்து  அனுப்பி இருக்கிறீயே !''

இந்தியர்களுக்கு 'செவ்வாய் 'தோஷமா :)
      செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உண்டாவென 
      கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசுக்கு  
      தேங்கு தண்ணீரில் ஓங்கி வளரும் டெங்கு கொசுவை 
      ஒழிக்க பணமில்லை ...மனமில்லை !

23 comments:

  1. இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

    எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
    http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. பதிவின் தலைப்பு நிச்சயம் பலிக்கும் :)

      Delete
  2. அருமையான பதிவு

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. 40 ரூபாய் கம்மிதானோ!

    குடி சிறக்கட்டும் என்றுதானோ!

    அந்த ஜோசியருக்கு நேரம் சரியில்லையோ!

    குண்டூசியில் ஒரு தத்துவமா!

    காபி அடிக்கவேண்டாம்னு நினைச்சிருப்பாரோ!

    முடியல்லே... அதுதான் நிஜம்!

    ReplyDelete
    Replies
    1. 35ரூபாய் சம்பாதித்தாலே ஏழை அல்ல என்று சொல்லப் படும் நாட்டில் 40ரூபாய் என்பது கம்மிதான் :)

      வம்சம் தலைக்குமா:)

      நல்ல நேரம் பார்த்து சொல்றவருக்கே கெட்ட நேரம்தான் :)

      மனசில் தைக்கும் படியான தத்துவம் என்றும் சொல்லலாம் :)

      இரண்டாண்டுக்கு முந்தைய இந்த ஜோக்கை நேற்று ஒரு நண்பர்,காப்பி அடிக்காவிட்டாலும்உல்டா செய்து இருந்தாரே :)

      எதையும் தாக்குப் பிடித்து தாக்குகிறதே கொசு :)

      Delete
  4. அடுத்தவனின் மனைவிதானே...! கல்லறையிலும் நாம் உலக அதிசயம்தான்... சில்லறையிலும் உலகுக்கே அதிசயம்தான்...!

    ‘ஆணுக்கு பெண்ணிங்கு இளைப்பில்லை காண்...’ குடி... குடியைக் கொடுக்கும்...!

    அப்ப... அமோக(மா) ‘வருவாய்...’ இல்லைன்னு சொல்லு...!

    ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்...’நா போறேன் குதிரை சவாரி...!

    எதையும் காப்பி அடிக்கிறதுதானே வழக்கம்...!

    டெங்கு கொசு... ஜனத்தொகையக் குறைக்கிதுல்ல...!

    த.ம. 2





    ReplyDelete
    Replies
    1. இந்தியாவின் பெருமை இப்படியா பரவவேண்டும் :)

      அடடா ,சமத்துவம் இதிலா வரவேண்டும் :)

      அமோக அறுவடை செய்ததால்தானே ஜெயிலுக்கு வந்திருக்கார் :)

      குருதையிலே மருதைக்கு வருவீங்களா :)

      இப்போ காப்பி பேஸ்ட் செய்வதும் பேஷனாகி போச்சு :)

      மறைமுகமா கொசுவை ஊக்குவிக்குதா அரசு :

      Delete
  5. Replies
    1. 'செவ்வாய் 'தோஷம் என்பது எல்லாம் கற்பனை தானே :)

      Delete
  6. Replies
    1. காதலின் சின்னம் அருமைதானே ஜி :)

      Delete
  7. 1. அஹ்ஹஹாஹ்ஹ் செம...

    2. ஹஹஹஹ இப்பல்லாம் இப்படித்தானே ஜி!!

    3. ஜோசியர் டுபாக்கூர்

    4. காப்பியையும் ஹேப்பியாக ரசித்தோம் ஜி

    அனைத்தையும் ரசித்தோம்

    ReplyDelete
    Replies
    1. செம கடி தானே )

      இப்படித்தான் என்றாலும் சகித்துக் கொள்ள முடியலையே :)

      அதான் மேலூருக்கு போயிட்டாரே :)

      ரொம்ப ஸ்ட்ராங்கா :)

      Delete
  8. Replies
    1. full என்றாலே கலக்கல்தானா :)

      Delete
  9. கலக்கல் பின்னூட்டங்களை பப்லிஷ் பட்டனைத்தட்டாமலேயே க்ளோஸ் செய்து விட்டேன் மொத்தத்தில் ரசிக்க வைத்தது

    ReplyDelete
    Replies
    1. எனக்குத்தான் கொடுப்பினை இல்லாம போச்சு :)

      Delete
  10. காதலர்களுக்குத்தான் காதல் சின்னமான கல்லரைக்கு உள்ள மவசு... தெரியும்.....

    ReplyDelete
    Replies
    1. காதலின் விதியே இதுவானால் கல்லறைதானே முடிவாகும் ...பாடல் சரிதானோ :)

      Delete