4 January 2017

மனைவிக்குமா காலாவதி தேதி :)

ஷ்ச்சு கிச்சுன்னு வர்ற பெயர்தானே இப்போ பேஷன்:)
               '' உன் பெண் குழந்தைக்கு வைக்கிற மாதிரி பெயரைச் சொன்னேன் ,உனக்கேண்டா கோபம் வருது ?''
               ''நாகம்மை ,நாச்சம்மை ,பேனா மைன்னு காலத்துக்கு ஒவ்வாத பெயராச் சொல்றீயே !''

எல்லார்கிட்டேயும் எல்லாமும் சொல்லக் கூடாது :)              
          ''மனைவிகிட்டே, வேலையை  கஷ்டப்பட்டு  செய்வதை விட இஷ்டப்பட்டு செய்யணும்னு சொன்னது தப்பா போச்சா ,ஏண்டா ?''
          ''இனிமேல் சமையலை நீங்களே பார்த்துக்குங்க என்று சொல்றாளே !''
விசுவாசமிக்க இன்ஸ்பெக்டரோ :)
           ''வீட்டிலே நுழைந்தது நாலு கொள்ளைக்காரங்க, ஒருவரை மட்டும் அந்த இன்ஸ்பெக்டர் சுட்டுப் பிடிக்க என்ன காரணம் ?''
           ''மற்ற மூணு பேரும் ஒழுங்கா மாமூல் கொடுக்கிறவங்களாமே!'' 

தொழில்லே கெட்டிக்காரன் தான் :)
         ''அந்தக் கொள்ளைக்காரன் தற்குறி என்றாலும் தொழில்லே கெட்டிக்காரன்னு எப்படி சொல்றீங்க ?''
         ''ஜெயில் கம்பிகளை இதுவரை எண்ணியதே இல்லையாம் ,ஆனால் எப்படிப்பட்ட  ஜன்னல் கம்பிகளையும் வளைச்சுடுவானாமே  !''

மனைவிக்குமா காலாவதி தேதி :)
          ''மனைவி பேரைக் கேட்டா 'காலாவதி''ன்னு ஏன் சொல்றே ?'' 
         ''ஓடிப் போன கலாவதியை வேற எப்படிச் சொல்றது?''
                                                            
வலி நிவாரணி இதைவிட வேறுண்டா:)
  தலைப்பிரசவத்தில் பிறந்தது  சிசுவுடன்  தாயும்தான்  ..
  சிசுவின் அழுகுரல் ஓசை போக்கியது ...
  தாயின்  பிரசவ வலியை !

23 comments:

  1. நாக், நாச் இப்படியும் வைக்கலாமோ??!!! ஹஹ

    அனைத்தையும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. அப்படி வைத்துவிட்டு இப்படித்தான் கூப்பிடுகிறார்கள் :)

      Delete
  2. அபிதகுஜாம்பாள், குசலகுமாரி, குருவம்மாள் பேரெல்லாம் ஓகேயான்னு கேளுங்க!

    நல்லதுங்க.. பிடித்த சமையலை நாமே செஞ்சு சாப்பிட்டுடற வசதி இருக்கு பாருங்க!

    ஒரு குழுவா இருக்கறவங்கள்ல ஒவ்வொருத்தணுமா மாமூல் தரணுமாம்? மொத்தமா அவங்க சார்புள்ள ஒருத்தர் கொடுத்தா பத்தாதாமா?

    எண்ணினா அதாவது நினைத்து கவலைப்பட்டா வளைக்க முடியாதோ என்னவோ!

    மீளாவதியோ!

    தத்துவம் நம்பர்...?

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு அந்த மைகளே பரவாயில்லையே:)

      தெம்பு இருந்தா வசதிதான் :)

      பாதியை அமுக்கிவிடும் அபாயம் அதில் இருக்கே:)

      அது சரி ,மனம் இருந்தால் மார்க்கமுண்டுதானே :)

      அவரிடமிருந்து மீண்டுவிட்ட வதி:)

      இது பிறப்புத் தத்துவம் :)

      Delete
  3. தம ரொம்ப வெறுப்பேற்றுகிறது. எங்கள் பதிவு அரைமணி நேரமாக முயற்சித்தும் சப்மிட் ஆகவே இல்லை. உங்களுக்கு வாக்களித்தால் சுற்றிக்கொண்டே இருக்கிறது. தனபாலன் தம எப்பவோ செத்துப்போச்சு என்று சொல்வது காதில் கேட்கிறது!

    ReplyDelete
    Replies
    1. ஐயகோ,தமிழ்மணத்துக்கு உயிர் கொடுப்பார் யாரும் இல்லையா :)

      Delete
  4. ‘மைனா’ன்னு நைனா பேரு வக்க வேண்டியதுதான்...!

    இனிமேலாவது சமையலை இஷ்டப்பட்டு செய்யுங்க என்கிறாளே...!

    சுட்டுப் போட்டாலும்... அவனுக்கு மாமூல் கொடுக்கிற புத்தி வராது...!

    படிப்பறிவில்லாப் பாமரன்...!

    ஓடிப் போன வேகத்தில திருப்பி வர்ராளே... திருப்பதி...!

    அழுது அழுது பெத்தாலும் அவதானே பெக்கனும்...!

    த.ம. 2


    ReplyDelete
    Replies
    1. பெத்த நைனாதான் பேர் வைக்கமுடியும் ,அடுத்தவனா வைக்கமுடியும் :)

      கஷ்டப் படுறது யாரு :)

      தன்மானச் சிங்கம்தான் :)

      அனுபவமே போதுமே .படிப்பெதுக்கு :)

      திருப்பி அனுப்ப வேண்டியதுதானே :)

      பெக்கணும் ,ஆனா பிள்ள பேருக்கு முன்னாடி அப்பன் பேர் இருக்கணுமாக்கும்:)

      Delete
  5. Replies
    1. கலாவதி என்றாலே ஒரு கிக்கா தானே இருக்கு ஜி :)

      Delete
  6. //பிரசவத்தில் பிறந்தது சிசுவுடன் தாயும்தான் ..//

    இதுதான் [தாய்க்கு] மறுபிறவியோ?!

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் சொல்லலாமே :)

      Delete
  7. காலாவதி ஹி.. ஹி...

    ReplyDelete
  8. காலைவாரி விட்டவள்
    காலாவதியா?

    ReplyDelete
    Replies
    1. பொருத்தமான பெயர்தானே :)

      Delete
  9. அமாவாசை பௌர்ணமி தமிழ் தெலுகு என்றெல்லாம் கூடப் பெயர் வைக்கலாமே மலையாளிகள் பெயரைக் குறைத்து விடுவார்கள் உ-ம் கமலா = கமலை அப்பா=அப்பை சுஜாதா =சுஜாதை etc etc
    கஷ்டப்படுவது யாரு
    சுட்டுப் பிடித்தாரா சுட்டுக் கொன்றாரா
    கலாவதி காலாவதி ஆகிவிட்டாரா
    தற்குறிக்கு எண்ணத் தெரியாமல் போய் இருக்கலாம்
    பின் எதற்கு பிரசவ வைராக்கியம்

    ReplyDelete
  10. ஹாஹாஹா! ரசித்தேன்! சிரித்தேன் ஜி!

    ReplyDelete