31 January 2017

ஹனிமூன் யாரோடு போவாரோ :)

மாமூல்  வாங்க வழியா இது :)
               ''வங்கியில் கொள்ளை அடித்தது நீதான்னு போலீஸால் நிரூபிக்க முடியவில்லை ,நீ போகலாம் !''
               ''இந்த கேஸில் மாமூல் கேட்டு  தொந்தரவு தரக் கூடாதுன்னு போலீசுக்கு எச்சரிக்கை பண்ணுங்க, எஜமான் !''

ஹனிமூன்  யாரோடு போவாரோ :)                     
               ''தலைவரோட அறுபதாம் கல்யாணத்தில் என்ன கலாட்டா ?''
              ''இன்னைக்கு , என் கழுத்துலே தாலி கட்டியே ஆகணும்னு, தலைவரோட 'சின்ன வீடு 'வந்து சண்டை போடுதாம் !''  
'கலர்' பார்க்க முடியலைன்னா கஷ்டம்தானே :)
                ''காலையில் சிகப்பு  ,மதியம் மஞ்சள்  ,ராத்திரி வெள்ளை மாத்திரையும்  சாப்பிடச் சொன்னா ,முடியாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
                ''என் பிரச்சினையே ,எல்லா கலரும் ஒரே கலரா  தெரிவதுதானே  ,டாக்டர் ?''
                              
இந்த காலத்து பசங்க ரொம்ப வெவரம் :)
           ''ஸ்கூல் பக்கத்திலே இருக்கிற போர்டிலே 'மெதுவாகச் செல்லவும் 'னு இருக்கிறதை ,ஏன் 'கவனமாகச் செல்லவும் 'னு திருத்துறீங்க ?''
           ''எல்லாப் பசங்களும் இதைப் படிச்சிட்டு ஸ்கூலுக்கு லேட்டா வர்றதா HM சொல்றாரே !''

உண்மை ஜோதிடம் ,ஜனகனமன நேரமும் சொல்லும் :)
               ''கவலைக்கிடமா இருக்கிற நம்ம தலைவர் பிழைக்க மாட்டார்ன்னு  சொல்றீயே ,எப்படி ?''
              ''ஜாதகத்தைப்  பார்த்த  ஜோதிடர் தலைவரோட 'ஜனகனமன நேரம் 'நெருங்கிடுச்சின்னு சொல்றாரே !'' 

 கேள்விக் குறியாகும் மரியாதை :)
 புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்கள்...  
இருட்டில் செய்கின்ற லீலைகள் எல்லாம் 
வெளிச்சத்தில் வரும்போது ...
மரியாதை   கேள்விக் குறியாகி  விடுகிறது !

20 comments:

  1. மாமூல் கேட்காவிட்டால் அப்புறம் அவர்கள் என்ன போலீஸ்!

    அப்போ அது 61ம் கல்யாணம்!

    பாவம். அவரால் 'கலர்' பார்க்க முடியாது!

    அப்புறம் சீக்கிரம் வர ஆரம்பிச்சுட்டாங்கலாமா?

    இப்பல்லாம் திரைப்படம் தொடங்கும்போதுதான் ஜனகனமன போடறாங்க...

    உண்மை!

    ReplyDelete
    Replies
    1. தீ வைப்பது மாதிரி அதுவும் ஒரு அடிப்படைத் தகுதியோ :)

      60000 கல்யாணம் பண்ணிய தசரத மகாராஜாவின் வாரிசோ :)

      இப்படியுமா கஷ்டம் வரும் :)

      கவனமா வர லேட்டாகும் என்கிறார்களே :)

      அது இப்போ ,நான் சொல்றது அப்போ :)

      அதைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதுமில்லை :)

      Delete
  2. போலீஸை பதினைந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடுகிறேன்...!

    சின்ன அம்மாவுக்குத் தாலி கட்டினா... பெரிய அம்மா கோவிச்சுக்குமே...!

    என்ன ஜென்மமோ... நாய் யாப்பா நீ...!

    ‘கவனமாகச் செல்லவும்’ வீட்டுக்குத்தானேன்னு கேக்கிறானே...!

    எதிர்க்கட்சித் தலைவருக்கு 'ஜனகனமன’ பாடியாச்சுன்னு சொன்னதால... தலைவரு ‘நீராரும் கடலுடுத்த’ என்று பீச்சுக்குப் புறப்பட்டுட்டாரு...!

    அறையில் வைத்துக் கொண்டதை... அம்மலத்தில் ஏத்தலாமா...?!

    த.ம. 2



    ReplyDelete
    Replies
    1. வெளியே வர முடியாத பிணை வாரென்ட் பிறப்பித்தால் நல்லது :)

      அதுக்காக எத்தனை நாள் காத்திருப்பது:)

      நாய்கள் கண்ணுக்கு கலர் தெரியாது என்பது உண்மையா :)

      வீட்டுக்கு எப்படி போனாலென்ன :)

      தொண்டர்கள் இல்லாமல் பீச்சுக்கு போகச் சொல்லுங்க ,இல்லைன்னா போலீஸ் பிடிச்சுக்கும் :)

      ரகசிய கேமெரா வச்சு அம்பலத்துக்கு கொண்டு வந்துட்டாங்களே:)

      Delete
  3. நீங்களும் ரொம்ப வெவரம் ஜி...

    ReplyDelete
    Replies
    1. இந்த விவரம் எல்லாம் ,உங்களுடன் அடிக்கடி ஆலோசனை செய்ததால் வந்தது ஜி :)

      Delete
  4. Replies
    1. கொள்ளைக்காரன் கோரிக்கையுமா :)

      Delete
  5. போலீஸைப்பற்றி கம்ப்ளைண்ட் பண்ண இதுதான் சரியான இடம்
    சமீபத்தில் ஆட்டோவுக்கு தீ வச்சதையும் இங்கே சொல்லலாமா ஜி ?

    ReplyDelete
    Replies
    1. சொல்லலாம் ,ஆனால் தீர்வுதான் வராது:)

      Delete
  6. 'சின்ன வீடு 'வந்து சண்டை போடுதாம் !''//

    கிழவனைக் கட்டிகிட்டு என்ன சுகத்தைக் கண்டிருக்கும்? பாவம், சொத்துக்கு ஆசைப்படுறதில் தப்பே இல்லை!

    ReplyDelete
    Replies
    1. அதானே ,ஏதாவது ஒரு பலனாவது வேண்டாமா:)




      Delete
  7. மாமூல் போலீசின் கண்களை மறைத்து விட்டது மாமூல் கிரமமாகக் கொடுக்கப்படுவதுதானே
    ஹனி மூன் போவதா முக்கியம் இப்போதைய பஞ்சாயத்தே வேறல்லவா
    அந்தக் காலத்தில் டாக்டரிடம் போனால் ஏதோ கலரில் மருந்து குடிக்கத் தருவார்கள் மாத்திரை எல்லாம் வியாதிக்குத்தான்
    ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் த ரேஸ்
    அரசியல் தலைவரா ஜனகனமனவை தள்ளிப்போடச் சொல்லுங்கள்
    புகழ் வெளிச்சத்தில்தானே மரியாதை இருட்டில் என்ன வேண்டிக்கிடக்கு

    ReplyDelete
    Replies
    1. இதுவும் மாமூலான தகராறு தான் :)
      கலகம் பிறந்தால் நியாயம் பிறக்குமென்று சின்ன வீடு கொடி பிடித்து விட்டாரே :)
      மாத்திரை கொடுத்து ஏமாற்றும் காலமாகிப் போச்சே :)
      நல்ல பாலிசி ,அனைவருமே கடைப்பிடிக்கலாம் :)
      சேர்த்த சொத்தை டாக்டருக்கும் தரட்டுமே :)
      பூனைக் கண்ணை மூடிகிட்டு உலகம் ஒரே இருட்டுன்னு நினைக்குமாம் :)

      Delete
  8. மாமூல்நல்லாஇருக்கு

    ReplyDelete
    Replies
    1. நல்லாயிருப்பது மாமூலா ,பேரமா :)

      Delete
  9. ''இந்த கேஸில் மாமூல் கேட்டு தொந்தரவு தரக் கூடாதுன்னு போலீசுக்கு எச்சரிக்கை பண்ணுங்க, எஜமான் !''

    மாமூல்நல்லாஇருக்கு

    ReplyDelete
    Replies
    1. கோரிக்கை நிறைவேறுமா ராஜவேல் ஜி:)

      Delete
  10. என்ன ஜி போலீஸ் அடையாளமே மாமூல்...தானே...

    அனைதத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. இத்தனை நாளா சீருடைதான் போலீஸ் அடையாளம்னு நினைச்சு கிட்டிருந்தேன் :)

      Delete