7 January 2017

கனவுக் கன்னிக்கு ஏது முதுமை :)

இவரல்லவோ உண்மையான தலைமை ஆசிரியர் :)
            '' அவரோட தலைமுடி மட்டும்  இன்னும் எப்படி கருகருன்னு இருக்கு ?''
            ''அவர்தான்  'தலை  மை 'ஆசிரியராச்சே !''

விந்தையான உலகம் இது :)
          ''என்ன சார் சொல்றீங்க ,மனுசங்களைப்  புரிஞ்சிக்கவே முடியலியா ?'' 
          ''கஷ்டப் பட்டு நடக்கும் போது யாரும் லிப்ட் தர மாட்டேங்கிறாங்க,இஷ்டப் பட்டு வாக்கிங் போனா ,வலிய வந்து லிப்ட் தர்றாங்களே !''

ஆமை புகுந்த வீடும் ,அ .மீனா  புகுந்த வீடும் உருப்படாதா :)               
                  ''மீனாங்கிற என்  மகளோடப் பெயரை மாத்தினாதான், அவளுக்கு புகுந்தவீட்டுக்குப் போற யோகம் வருமா ,ஏன் ?''
                ''உங்கப் பெயர் ஆனாவிலே ஆரம்பிக்கிறனாலே அபசகுனமா நினைக்கிறாங்களே !''

தரகர் சொன்னதும் பொய்யே பொய்யே :)
                ''பொண்ணுக்கு  காது சரியா கேட்காதுன்னு ஏன் முன்னாடியே சொல்லலே?
               ''எள்ளுன்னா எண்ணெயா நிற்பானு  சொன்னேனே!''

நாட்டுலே இப்படியும் சில ஆராய்ச்சியாளர்கள் இருக்காங்க :)
    பாம்புச் சட்டையைக் கூட  என்ன பிராண்ட் ,என்ன சைஸ் என்று 
    ஆராய்பவன்தான் ...
    மயிர் பிளக்கும்  ஆராய்ச்சியாளன் !

கனவுக் கன்னிக்கு ஏது முதுமை :)
முந்தைய தலைமுறையினருக்கு கனவுக் கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவியை  ...
அழகி  என்று சொன்னால் யாருக்கும் மாற்று அபிப்பிராயம் இருக்கமுடியாது  ...
இந்தியாவின்  கனவுக்கன்னியான அவரைப் பற்றி ...
நம் இந்திய எந்த மாநில கல்விக்கூட புத்தகங்களிலும் குறிப்பு இருக்கமுடியாது  ...
தமிழின விரோத சிங்கள அரசு ...
சிங்கள மாணவர்களுக்காக வெளியிட்டுள்ள ஏழாம் தரத்திற்கான பாடப் புத்தகத்தில் ...
'தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள் 'என்று குறிப்பிட்டு உள்ளதாம் ...
இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது ...
அழகு என்பது ஜாதி ,மதம்,இனம் .மொழி கடந்து ரசிக்கப் படுவது என்றாலும் ...
இதை இந்த நேரத்தில் சிங்கள அரசு பதின்ம வயதினருக்கான பாடப் புத்தகத்தில் ... சொல்லவேண்டிய காரணம் என்னவாக இருக்கும் ?
அதுவும் தமிழச்சி என்று இனத்தைக் கூறிக் கொக்கரிப்பதாகவே தெரிகிறது !


24 comments:

  1. தலைமையாசிரியரின் இள‘மை’யின் இரகசியம் தலை‘மை’ தானோ...?!

    வசதியின்றி பட்டினிச் சாவும்... வசதியுடன் இருந்தும் எதுவும் உண்ண முடியாமல் நோயும்... இங்கே தானே...!

    ஆ...! மீனா...!

    நா சொன்னேன்... ஒங்க காது கேக்கலை...!

    இதை... சட்டை செய்ய வேண்டியதுதான்...!

    ‘பதினாறு வயதினேலே’ ஸ்ரீதேவி போல சிங்களச்சி யாருமே குறிப்பிட்டுச் சொல்லும்படி அழகாக இல்லையோ...?! தமிழச்சியும் அழகுதான்... தமிழ் ஆச்சியும் அழகுதான்...!

    த.ம. 1


    ReplyDelete
    Replies
    1. இருக்கிறதே நாலு முடி அதுக்கு டை வேறா :)

      ஏழையை படைத்தது அவனென்றால் இறைவன் என்பவன் எதற்காக :)

      முள்ளு குத்தின மாதிரி ஏன் அலர்றீங்க :)

      இது வேறையா :)

      அசட்டை செய்ய வேண்டியதையா :)

      சிங்களச்சிகளும் அந்த காலத்தில் இருந்து இன்றுவரை கோலிவூட்டில் இருக்கத்தானே செய்கிறார்கள் :)

      Delete
  2. முதலில் பாடப் புத்தகத்தில் இவையெல்லாம் தேவையே இல்லையே...

    ReplyDelete
    Replies
    1. பிஞ்சு மனதிலேயே விஷ விதையை தூவுகிறார்கள் :)

      Delete
  3. Replies
    1. தரகர் சொன்ன பொய்யையுமா :)

      Delete
  4. தலை மை ஆசிரியர்! ஹா.... ஹா.... ஹா...

    வாக்கிங் போகும்போது லிப்ட்தானே தர்றாங்க... கிஸ் கொடுக்கலை இல்லை..?!!!

    மீனா அ என்று மாற்றிச் சொல்லிட வேண்டியதுதானே!!

    ஆராய்ச்சியின் எல்லை!

    //மந்தைய தலைமுறையினருக்கு//
    மந்தைங்கறீங்களா!

    ReplyDelete
    Replies
    1. தலை உள்ளே இருப்பதை நாலு பேர் மதிக்கணும்னா,வெளியேயும் சாயம் பூசவேண்டியிருக்கே :)

      'வாக்கிங்'கில் அது நடந்தால் ஷாக்கிங் ஆகிடுவாரே:)

      சொன்னாலும் எவன் அப்படி சொல்றான் ,அமீனான்னே கூப்பிடுறானே:)

      இதுக்கு எது எல்லை :)

      மந்தை மாதிரிதானே ரசிகர்கள் யாரோ ஒருவர்பக்கம் சாய்கிறார்கள் :)

      Delete
  5. Replies
    1. தலையிலே பூசப்பட்டிருக்கும் சாயம் யாருக்கும் சந்தேகத்தை தராத வகையில் பராமரிப்பதும் ஒரு கலைதானே:)

      Delete
  6. தலை மை அஹ்ஹ்ஹ் ரசித்தோம் ஜி

    அனைத்தையும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. தலைமை ஆசிரியர் என்றால் ஒரு கெட் அப் இருக்கத்தானே வேணும் :)

      Delete
  7. தலையில மை ஆசிரியருக்கு
    கரு கருவென முடியா?
    அருமையான தகவல்

    ReplyDelete
    Replies
    1. பேனாவில் மை போட்ட காலம் போய்,தலையிலே மை பூசும் காலமாகிப் போச்சே :)

      Delete
  8. தலையில் மை பூசுபவரெல்லாம் தலைமை ஆசிரியரா
    கஷ்டப்படுவது ஆணா பெண்ணா
    திருமணத்துக்குப்பின் இந்த அ இருக்குமா
    காது கேட்காதவர் இப்படியும் செய்வாரோ
    பாம்புச் சட்டையில் ஒரு வேளை மயிர் இருக்கிறதோ என்று பார்ப்பவனா
    உண்மையில் ஸ்ரீதேவி தமிழச்சிதானா

    ReplyDelete
    Replies
    1. நல்ல கேள்வி ,தாடி வைத்தவன் எல்லாம் பெரியாராக முடியுமா ,தாகூராக முடியுமா :)

      நடந்த கால் சீதேவி ,நடக்காத கால் மூதேவி என்கிறார்கள்,நீங்களே முடிவெடுங்க :)

      புருஷன் பெயர் அழகிரி என்றால் தொடரத்தானே செய்யும் :)

      எண்ணைக் கொண்டு வந்து குளிப்பாட்டவும் செய்வார் :)

      பாம்பு என்ன ஹேர் கட்டா பண்ணிட்டு வருது ,மயிர் ஒட்டியிருக்க :)

      பொறந்த ஊர் சிவகாசி என்றால் ,தமிழச்சி தானே :)

      Delete
  9. Replies
    1. இந்த கலெக்சனில் உங்களுக்கு உண்டான கமிஷனை தந்து விடுகிறேன்,நன்றி :)

      Delete
  10. கனவுக் கன்னிக்கு முதுமையில்லை என்பது தெரியாமல் அவர்களுக்குள்ள ஐந்தறிவால் கொக்கரிக்கிறார்கள்....

    ReplyDelete
    Replies
    1. கொக்கரிப்பது யார் நிஜக் கன்னிகளா :)

      Delete
  11. Replies
    1. விந்தையான உலகம்தானே இது:)

      Delete
  12. ஒரிஜினல் முடிகூட இவ்வளவு கருப்பாய் இருக்காதுதானே :)

    ReplyDelete
  13. அ.மீனா புகுந்த வீட்டையும்தானே:)

    ReplyDelete