31 July 2013

சின்ன வீடு 'செட் அப் 'புக்கு சம்மதித்த மனைவி !என் முதல் கணினி அனுபவம் ![தொடர் பதிவு ]

சின்ன வீடு 'செட் அப் 'புக்கு சம்மதித்த மனைவி !என் முதல் கணினி அனுபவம் ![தொடர் பதிவு ]
இன்று தேதி 7.31.13[இங்கே அமெரிக்காவில் தேதியை நடுவில்தான் எழுதுவது வழக்கம் ]நேரம் இரவு 10.34[நல்லவேளைநிமிடத்தை முன்னாடி போடாம விட்டாங்க ! ]
ஜன்னலுக்கு வெளியே ...சாலையில் பறந்துக் கொண்டிருக்கும் கார்களின் அணிவகுப்பைப் போன்றே கணினி கற்பதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நினைவிற்கு அணியணியாய் வருகிறது ...e மெயிலைக் கண்டுபிடித்த திரு .அய்யாதுரை அவர்களின் ஐந்து கம்பெனிகளில் ஒன்றான ...[வெள்ளை மாளிகைக்கு ஆலோசனை சொல்லும் ]முக்கிய நிறுவனத்தில் ,உயர்ந்த பதவியில் இருந்தாலும் ... ஆரம்பகால என்  அனுபவங்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது !
     சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி இறுதி வகுப்பை முடித்த நேரம் ...வரக்கூடாத ஆசைன்னு சொல்ல முடியாது ...முன்னேறத் துடிக்கும் இளைஞனுக்கு வர வேண்டிய ஆசை எனக்கும் வந்தது ...கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ள வேண்டுங்கிற ஆசைதான் !
     அப்போது இருந்த அண்ணாநகரில் bsc ஷோ ரூம் அருகில் ...csc சென்டரின் 'இலவச கம்ப்யூட்டர் ட்ரைனிங் 'போர்டு என்னை அழைத்துக் கொண்டே இருந்ததால் ,,,உள்ளே சென்றேன் .
    எதிர் காலத்தில் பில்கேட்ஸ் அளவிற்கு வருவேங்கிற பொலிவை என் முகத்தில் பார்த்த மாதிரி வரவேற்பு பலமாக இருந்தது .
''ட்ரைனிங் டீடைல் வேணும் !''
''மூணுமாசம் ப்ரீ கோர்ஸ் .ஸ்டடி  மெட்டீரியல்ஸ் நீங்க வாங்கிக்கணும் ''
''ரொம்ப சந்தோசம் ,அதுக்கு எவ்வளவு செலவாகும் ?''
''ஆக்சுவலா அதோட விலை ஐந்தாயிரம் ரூபாய் ,ஆனா எங்களுக்கு சென்ட்ரல் கவர்ன்மெண்டில் இருந்து எய்ட் வர்றனாலே நீங்க 3000 ரூபாய் கொடுத்தா போதும் ''
     300 ரூபாய்க்கே எங்கள் வீட்டில் வசதி இல்லை 3000 ரூபாய்க்கு எங்கே போறது ?இருந்தாலும் கம்ப்யூட்டர் கல்விமேல் இருத்த மோகம் குறையவில்லை ...அந்த மோகம்தான் மாதமானால் 30000டாலர் சம்பாதிக்கும் சீட்டில் இன்று உட்கார வைத்திருக்கிறது !
    அடுத்து கண்ணில் பட்டது ஒரு பிட் நோட்டிஸ் ,,,அதில் 'கம்ப்யூட்டர் பேசிக் கற்க 100ரூபாய் மட்டுமே 'என்றிருந்தது ,,அட்ரசைப் பார்த்தேன் .சுமார் 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் காளவாசல் பகுதி..ஆர்வக் கோளாறில் சைக்கிளை மிதி மிதியென்று மிதித்து சென்று விசாரித்தேன் ...
''100 ரூபாய் கட்டிட்டு காலை 6 to 7 பாட்ஜில் சேர்ந்துக்குங்க ''
''நான் அண்ணா நகரில் இருந்து வருகிறேன் 9 to 10 பாட்ஜில் சேர்ந்துக்கிறேனே !''
''அது லேடீஸ் பாட்ஜ் ஆச்சே ''என்றார்களோ இல்லையோ ,எனக்கு கற்கும் ஆசையே போய்விட்டது .இத்தனை வருஷம் பசங்களோட மட்டுமே படித்து காய்ஞ்சுக் கிடக்கேன் ..இவங்க என்னடான்னா ,லேடீஸ் தனி கிளாசாமே ?அன்று ...கன்னியர்கள் இன்றி கணினி கற்க மனம் வரவில்லை .இன்று ,,,நியூ யார்க் அருகில் நோவார்க் நகரில் பல நாட்டு பெண்களுடன் பணிபுரியும் வண்ணமயமான வாய்ப்பு !
 அப்புறம் ,கீழவாசல் அருகில் 'எல்லாமே ப்ரீ 'என்று ஆசை காட்டி அழைத்ததால் சென்றேன் .
அங்கே ,அவர்கள் கேட்ட முதல் கேள்வி ...''என்ன டைப் படிப்பு விரும்புகிறீங்க ?''
  கனவுக் கன்னிகளுக்கு அடுத்த படியாக ஓவியர் ஜெயராஜின் கைவண்ணத்தில் உருவான கவர்ச்சிக் கன்னிகள் என் மனதில் ஒத்தியோ ,வாடகையோ தராமல் குடியிருந்த நேரம் !
''அனிமல்நேசன் படிக்கலாம்ன்னு இருக்கேன் ;ன்னு சொன்னதும் கொல்லென்று சிரித்துவிட்டார்கள் ...எனக்கு அவமானமாக இருந்தது ...[அன்று பட்ட அவமானம்தான் இன்று என்னை  usa கொண்டுவந்து சேர்த்து இருப்பது தனிக் கதை ]
''அனிமல்நேசன் இல்லை ,அனிமேசன் ...அதை கத்துக்க வருசக் கணக்காகுமே !''
நான் அவமானப்பட்ட இடத்தில் படிக்க மனம் வரவில்லை ...இன்றுவரை அந்த சென்டர் பக்கம் தலை வச்சும் படுக்கலே !
  அப்புறம் ...SSLC ல் நான் எடுத்த மார்க்கைப் பார்த்து KLN  ஐ டி கல்லூரியில் 'எங்க காலேஜுக்கின்னு ஒரு மரியாதை இருக்கு'என்று கைவிரித்து விட்டார்கள் .
  பிறகு ,சென்னை தாம்பாளம் அருகில் மூன்றாந்தர கல்லூரியில் Bsc CS ஒருவழியாக படித்துவிட்டு 'மதுரை பாத்திமா கல்லூரியில் MCA பர்ஸ்ட் கிளாசில் பாஸ் செய்ததும் .காம்பஸ் செலக்ட் ஆனதும் ,பெங்களூரு இன்பொடெக்கில் பணி புரிந்ததும் ,என் திறமை கண்டு திரு அய்யாத்துரை அழைத்ததும் ,திரு .நாராயண மூர்த்தி 'நீ அங்கே  இருக்க வேண்டிய ஆள் 'என்று வாழ்த்தி வழி அனுப்பியதையும் ...இப்போ நினைச்சாலும் கனவு மாதிரியே இருக்கிறது !
கனவு மாதிரியென்னா கனவேதான் என்பதை தெரிவித்துக் கொண்டு என் புருடாவை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் ...
பல பதிவர்கள் கணினி அனுபவத்தை எழுதி இருப்பதை படித்து நானும் பில்ட் அப் செய்து எழுதியதுதான் இதுவரை நீங்கள் படித்தது ,அதையெல்லாம் டெலிட் செய்து விடுங்கள் ...இனிமேலே படிக்கப் போறதுதான் 'கணினி என் முதல் அனுபவம் '!
 கம்ப்யூட்டர் படிப்பு எல்லாம் நம்ம ஊருக்கு வர்றதுக்கு முன்னாடியே என் படிப்புக் காலம் முடிந்து விட்டது ...டைப்பிங்கூட கற்றதில்லை !
ஆனந்த விகடன் ,குமுதம் .தினமலர் வாரமலர் போன்ற வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கு கதை ,ஜோக் எழுதிக் கொண்டிருந்த எனக்கு என் மகன் அஜய் சந்தன் வலைப்பூவை உருவாக்கிக் கொடுத்தான் ...டைப் அடிப்பதில் நானும் 'ஒருவிரல் கிருஷ்ணா ராவ் 'ஆகத்தான் இருந்தேன் ,இப்போது பிக்கப் ஆகி நாலு விரல்கள் கில்லாடிகளாக வேலை செய்கின்றன !
தந்தைக்கு மந்திரம் சொன்னவன் கந்தன் என்று புராணக் கதை உண்டு ...எனக்கு கம்ப்யூட்டர் கற்று தந்தவன் மகன் அஜய் சந்தன் தான் !அவனுக்கு ஆங்கிலம் ;ஹிந்தியும் தான் அத்துப்படி ...அவனுடைய ப்ளாக்  http://ajeyscomputerblog.blogspot.in/  விரும்பினால் படித்துப் பாருங்கள் !என் பதிவுகளை நானேதான் டைப்படித்து ஒட்டிக் கொண்டு இருக்கிறேன் ,,,நுணுக்கமான விஷயங்களை அவன் செய்து தருவான் ,அதுக்கு மேலும் ,நண்பர்கள் திரு ,திண்டுக்கல் தனபாலன் ,தமிழ்வாசி பிரகாஷ் போன்றவர்கள்  உதவுகிறார்கள் !
 எல்லாம் சரி ,தலைப்புக்கு விளக்கம் சொல்லுங்க என்று கேட்பது புரிகிறது ...ஒண்ணுமில்லைங்க ,என் வீட்டில் இருப்பது ஒரேஒரு கம்ப்யூட்டர் தான் !என் மனைவி ,இரண்டு பையன்கள் 'மற்றும் என்னிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறது !
'வீட்டிற்கு வந்தால் என்னைக் கூட கண்டுக்க மாட்டேங்கிறீங்க ,நான் பெண்டாட்டியா ,கம்ப்யூட்டர் பெண்டாட்டியா''ன்னு என்னவள் கோபித்துக் கொள்கிறாள் ...
''உனக்கான இடம் என்னைக்கும் பறி போகாது ,வேணும்னா லேப்டாப் ஒண்ணை  வாங்கி சின்னவீடா வச்சிக்கிறேன்.பெரிய வீடா எப்பவும் நீயே இருக்கலாம்''ன்னு சொன்னதற்கு 
கொள்கை அளவில் ஒப்புதல் தந்து இருக்கிறாள் என்னவள் !
நாட்டுலே வழங்கப் பட்டுவரும் விலையில்லா மடிக்கணணி ஒன்று ,என் மடியிலும் தவழ கூகுள் ஆண்டவர்தான் அருள் புரியணும் !
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தொடர் பதிவுக்கு ...இந்த மதுரைக்காரன் .மற்ற மதுரைக்காரங்க ஐவரை அழைக்கின்றேன் ....
1.  http://revakavithaikal.blogspot.com/ -M .ரேவா    [தாய்க் குலத்திற்கு முதல் மரியாதை]
2. http://veeluthukal.blogspot.in  - மதுரை சரவணன்
3.  http://www.naamanivannan.in/  -நா.மணிவண்ணன்
4.http://avanishiva.blogspot.in/   - உண்மையுடன் - கொஞ்சம் பொய்
5. http://jeyarajanm.blogspot.in/  தென்றல் 

30 comments:

  1. உங்களுக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடன்... ரசித்தேன்... உங்களின் மகன் அஜய் சந்தன் அவர்களுக்கு (சூர்யா ரசிகரோ...) வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உடனடியாக ரசித்து கருத்துரைத்த திண்டுக்கல் தனபாலன், அவர்களே மிக்க நன்றி !
      என் மகனுக்கு டீனேஜ் பருவம் ,வெளிப்படையா சூர்யா ரசிகன் என்பது தெரிகிறது ...இன்னும் யார் யார் இருக்கிறார்களோ ?யார் மனதில் யாரோ ?
      நான் தகவல் தருவதற்கு முன்பே ,என் சார்பாக நீங்கள் தொடர் பதிவை தொடர 'மதுரைக்காரங்களை 'அழைத்ததற்கும் நன்றி !

      Delete
  2. முதலில் புருவம் உயர்ந்தது
    பின்னன் வயிறு வலித்தது

    ReplyDelete
    Replies
    1. புருவம் உயர்ற மாதிரி தலைப்பு [காதுலே பூன்னு சொல்லலாம் ]வச்சாதான் படிக்க வர்றக் கூட்டம் டபிள் ஆகுது ?நீங்க வேணாப் பாருங்க ,அதிகம்பேர் ரசித்த தொடர்பதிவு இதுவாகத்தான் இருக்கப் போகிறது !
      சிரிச்சு வயிறு புண்ணாச்சுன்னு மருந்து கேட்டா மருத்துவரும் சிரிப்பாரே ,என்ன செய்யப் போறீங்க ?
      நன்றி !

      Delete
  3. ரசித்தேன்...சிரித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. முன்பு ஒருமுறை கோவை நேரத்தில் பிரியாணி மணக்கமணக்க சாப்பிட்ட ஞாபகம் வருகிறது ,,,ஜோக்காளியின் கைவண்ணத்தை ரசித்து சிரித்ததற்கு நன்றி !

      Delete
  4. Replies
    1. ஷாக் ஆனது தலைப்பைப் படித்தா ,தொடர் பதிவைப் படித்தா ?எப்படியோ தப்பிவிட்டீர்களே சந்தோசம் !
      நன்றி !

      Delete
  5. அழைத்ததுக்கு நன்றி .....ஆரம்பிச்சுருவோம்

    ReplyDelete
  6. அழைத்ததுக்கு நன்றி .....ஆரம்பிச்சுருவோம்

    ReplyDelete
    Replies
    1. இரண்டுமுறை ஆரம்பிச்சுருவோம்ன்னு சொல்லி இருப்பதைப் பார்த்தால் பிச்சு உதறிடுவீங்கன்னு நினைக்கிறேன் ...உங்கள் தொடர் பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் !
      நன்றி !

      Delete
  7. அடச்சே நான் கூட எல்லாமே உண்மைன்னு நினச்சு பல்பு வாங்கிட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. இப்படி உடனே கரையிற வெல்லக் கட்டியா இருக்கீங்களே ,சக்கரக்கட்டி !
      நன்றி !

      Delete
  8. எப்படியோ... உங்களையும் நீளமா/பெரிய பதிவா எழுத வச்சுடாங்களே...

    நெஜம்ன்னு நெனச்சா டெலீட் பண்ண சொல்லிடிங்களே பகவான்ஜி

    ReplyDelete
    Replies
    1. லேபிளைப் பாருங்க பாஸ் ...ஏற்கனவே இப்படி நீளமா 'சிரிப்பாக்கத்தில் 'எழுதி இருக்கிறேனே !தொடர் பதிவு எழுத கிடைத்த வாய்ப்பை 'டூ இன் ஒண்ணாய் 'பயன் படுத்திக் கொள்ள காரணமான உங்களுக்கும் ,என்னை அழைத்த நண்பர் மணி கண்டன் அவர்களுக்கும் நன்றி !
      அப்புறம் ...என் பதிவை டெலிட் செய்யும் வானளாவிய அதிகாரம் என்னிடம் இருப்பதை எந்த கொம்பனாலும் பறிக்க முடியாதே !பல்பு வாங்குவதே உங்கள் தலை எழுத்து ..அதை யாரால் மாற்ற முடியும் ?

      Delete
    2. //எப்படியோ... உங்களையும் நீளமா/பெரிய பதிவா எழுத வச்சுடாங்களே...//

      ஹா..ஹா.. அதுக்காகத்தான் தொடர் பதிவுக்கே அழைத்தேன்.

      Delete
    3. போட்டு வாங்கிறதுன்னு சொல்றது இதைத்தானா மணிமாறன் சார் ?
      நன்றி !

      Delete

  9. //.e மெயிலைக் கண்டுபிடித்த திரு .அய்யாதுரை அவர்களின் ஐந்து கம்பெனிகளில் ஒன்றான ...வெள்ளை மாளிகைக்கு ஆலோசனை சொல்லும் முக்கிய நிறுவனத்தில் ,உயர்ந்த பதவியில் இருந்தாலும் ..//

    வணக்கங்க சார்... நல்லாயிருக்கீங்களா சார்... தப்பாங்க சார் சொல்லியிருந்தாங்க சார்...மன்னிச்சிடுங்க சார்..

    ReplyDelete
    Replies
    1. என் பதிவை படிச்சிட்டு அரண்டு போய் இருக்கீங்கன்னு நினைக்கிறேன் ...ஒண்ணும் கவலைப் படாதீங்க ...நம் G mail வழியே நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கும் வல்லரசின் மூலமாக... உங்களை தொந்தரவு ஏதும் செய்ய மாட்டேன் !,,,மன்னிப்பு எல்லாம் எதுக்கு ?இனிமேல் தொடர் பதிவுக்கு என்னை மாட்டி விடாமல் இருந்தால் சரி !
      நன்றி !

      Delete

  10. \\கனவுக் கன்னிகளுக்கு அடுத்த படியாக ஓவியர் ஜெயராஜின் கைவண்ணத்தில் உருவான கவர்ச்சிக் கன்னிகள் என் மனதில் ஒத்தியோ ,வாடகையோ தராமல் குடியிருந்த நேரம் !\\

    ஹா..ஹா..

    ReplyDelete
    Replies
    1. கட்டிக்கப் போற பொண்ணு ஜெயராஜ்சார் ஓவியம் மாதிரி இருக்கணும்னு சொல்றவங்களையும் இருக்காங்க !ஹிஹி !
      நன்றி !

      Delete
  11. என்னது புருடாவா... ஹா.ஹா.. செம காமெடி பண்ணிடீங்க போங்க..

    ReplyDelete
    Replies
    1. இந்த ஜோக்காளிக்கு இருக்கிற அறிவுக்கு usa யிலே இருப்பார்ன்னு இமேஜ் கிரியேட் நீங்க செய்துகிட்டதை நினச்சு பெருமை படுறேன் ..பெருமை படுறேன்யா !
      நன்றி !

      Delete

  12. //,நான் பெண்டாட்டியா ,கம்ப்யூட்டர் பெண்டாட்டியா''ன்னு என்னவள் கோபித்துக் கொள்கிறாள் ...//

    ஹீ.ஹீ.. இதே பிரச்சனைதான் எங்க வீட்டிலும்

    ReplyDelete
    Replies
    1. நமக்கே இப்படி அர்ச்சனை கிடைக்குதே ,on line லேயே இருக்கிற நண்பர் திண்டுக்கல் தனபாலன் என்ன பாடுபடுறாறோ ?
      நன்றி !

      Delete
  13. தினசிரி ஜோக் போலவே முதல் கணினி அனுபவமும் நகைச்சுவையாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை ...முதல் கணினி அனுபவங்கிறனாலே காமெடியா போச்சு !முதல் இரவு அனுபவம்னா பேஜாரா ஆயிருக்கும் !
      வரிக்கு வரி ரசித்து கமெண்ட் போட்டதிற்கு நன்றி !

      Delete
  14. ரொம்ப லேட்டா வந்திருக்கிறேன்னு நினைக்கிறேன்...தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி...விரைவில் பதிவில் சந்திப்போம்..

    ReplyDelete
    Replies
    1. Late better than never என்பதால் பரவாயில்லை ...பதிவிலும் சந்திக்க ஆசை ...பதிவுலக நண்பர்களை வருகிற பதிவர்கள்
      திருவிழாவிலும் சந்திக்க ஆசை !சந்திப்போம் ...
      நன்றி !

      Delete