18 October 2013

இன்று முதல் இந்தியா 'இன்ஸ்டன்ட் 'வல்லரசு !

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.7 %மாக குறையுமென்று உலக வங்கி எச்சரிக்கிறது ...
2020ல் இந்தியா  வல்லரசு ஆகுமென்று அய்யா
அப்துல் கலாம்  மிகவும் தள்ளிப் போடுகிறார் ...
2013யிலேயே வல்லரசு ஆகும் அதிசயம் நடக்கப் போகிறது ...
இன்றே நமக்கு ஆயிரம் டன் தங்கப் புதையல் கிடைக்க இருப்பதாக 'நம்பத் தகுந்த வட்டாரங்களில் 'இருந்து தகவல் வெளியாகி உள்ளது ...
உத்தரப் பிரதேசில் அரசாண்ட மன்னன் ராஜாராம் பக்ஸ்ஜி ,சாமியார் சோபன் சர்க்கார்  கனவில் தோன்றி ஆயிரம் டன் தங்கப்புதையலை  எடுத்து பாதுகாக்குமாறு அருள் வாக்கு கொடுத்துள்ளார் ...
அதன் அடிப்படையில் தொல்பொருள் துறை இன்று அகழ்வுப் பணியை ஆரம்பிக்க உள்ளதாம் !

8 comments:

  1. அதிசயம் தான் நடக்க வேண்டும் போல...!

    ReplyDelete
    Replies
    1. அதிசயம் நடக்கவில்லை என்றால் ...உண்டான செலவை சாமியாரிடம் வசூலித்து விட வேண்டும் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. அப்போ கடனும் ஒழியுமோ

    ReplyDelete
    Replies
    1. இதையும் அருள் வாக்கு கொடுத்தவரிடம் தான் கேக்கணும் !
      நன்றி கவியாழி அவர்களே !

      Delete
  3. இப்படித்தான் நாம் வல்லரசாகனும்
    வேற வழி ?

    ReplyDelete
    Replies
    1. வல்லரசுக்கு மேலே எதுவும் இருக்கா ?எதுக்கு கேட்கிறேன்னா அடுத்த புருடாவும் இப்போ ஆரம்பம் ஆயிடுச்சே !
      நன்றி !

      Delete