6 October 2013

பயணிகள் மட்டுமல்ல ,பதிவர்களும் தெரிஞ்சுக்க வேண்டியது !


வெளிநாட்டிற்கு செல்லும் சீனர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது சீன அரசு ...
அது அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல ...
எல்லா  நாட்டு மக்களுக்கும்  பொருந்தும் !
நம் பதிவர்களுக்கு எப்படி பொருந்தும் என்றால் ...
      பொது கழிப்பிடங்களில் நீண்டநேரம் இருக்க வேண்டாம் !
[பதிவைப் பற்றி வெளியே வந்து யோசிங்க ]
      கழிப்பிடங்களை அசுத்தம் செய்யாதீர்கள் !
[உங்களின் பதிவு படிப்பவர் மனதில் வக்கிர எண்ணங்களை உருவாக்கக் கூடாது ]
      பொது இடங்களில் மூக்கை நோண்டக்கூடாது !
[பதிவுக்கு மண்டையை குடைந்துக்கலாம் ,மூக்கை நோண்டிக்கக்கூடாது ]
      நூடுல்சோ ,சூப்போ உண்கையில் சத்தம் வரக்கூடாது !
[நம் பதிவு  படிப்பவரின் பொறுமையை 'உறிஞ்சி'டக் கூடாது ]
     விமானங்களில் தரப்படும் உயிர் காப்பு உடைகளை திருடாதீர்கள் !
[சிந்தித்து எழுதுபவன் பதிவர் ,காப்பிபேஸ்ட் செய்வதும் திருட்டுதான் ]
மிக மிக முக்கியம் ...
     நீச்சல் குளத்தில் சிறுநீர் கழிக்காதீர்கள் !
[பதிவைப்போட முடியவில்லையென  பதட்டமோ ,பயமோ இருந்தால் மேற்கண்ட காரியம் தானாகவே நடந்து விடும் !] 

14 comments:

  1. மிகவும் சரிதான்
    பதிவர்களுக்கு பயனுள்ள டிப்ஸ்தான்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இந்த வாழ்த்தை சீன அரசுக்கு அனுப்பி விடுகிறேன் !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  2. இந்தளவு பயமும் பதட்டமும் இருக்கிறதா...?

    ReplyDelete
    Replies
    1. இருக்கு ,ஆனா 'அந்த 'அளவுக்கு இல்லை !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  3. Replies
    1. தங்களின் வருகைக்கும் .பாராட்டுக்கும் நன்றி அய்யா !

      Delete
  4. படிக்கும்போது கொஞ்சம் மூக்கைப் பிடித்துக்கொள்வது அவசியமாக இருந்தாலும் ,ரசிக்கும்படியாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சும்மாவா சொன்னான் கவிஞன் பாப்லோ நெருடோ 'மூத்திரத்தின்நாற்றத்திலும்.பூவின் மணத்திலும் என் கவிதைப் பிறக்கும் 'என்று !
      நன்றி மேடம் !

      Delete
  5. அட இப்படிக்கூட யோசிப்பீங்களா?

    ReplyDelete
    Replies
    1. அவரவர் வலைப்பூ ,அவரவர் ராஜாங்கம் ,இப்படித்தான் பரிபாலனம் செய்யணும்னு வரையறை இல்லையே ,கருண் ஜி ?
      நன்றி !

      Delete
  6. சரிங்க நீங்க இந்தப் பதிவை எங்கே இருந்து சிந்தீசிங்க

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா நீங்க நினைக்கிற இடத்தில் இருந்து சிந்திக்க வில்லை !சிஈ ஈ ஈ ...
      நன்றி மது கஸ்தூரி ரெங்கன் ஜி !

      Delete