30 October 2013

இது காதல் தோல்வி தற்கொலை அல்ல !

 செய்தி தாளில் சமீபத்தில் ஒரு தற்கொலை செய்தி... 
விஷம் குடித்து தற்கொலை ...
           அய்யோ பாவம் எனத்தோன்றியது!
புலி வேஷம் கட்டி ஆடுபவர் ...
            இவருக்கென்ன கஷ்டமோ ?

நாலு ஆடுகளில் ஒன்று தப்பியதால் விரக்தி ...
            அதனால் இவருக்கென்ன விரக்தி ?
புலிவேஷம்போட்டு கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார் ...
             அது அவர் ஆசை ,அப்புறம் ?
நாலு ஆடுகளை பல்லால் கவ்வி எறியஆரம்பித்தார் ...
             இதென்ன கூத்து ?
மூன்று ஆடுகளை எறிந்து விட்டார் ...
              உலக சாதனை தான் ,அடுத்து ?
ஒரு ஆடு மட்டும் தப்பித்து விட்டது ...
             கொடுத்து வச்ச ஆடு ,அப்புறம் ?
ஆடு தப்பியது தெய்வகுற்றம் என நினைத்து விஷம் குடித்து இறந்தார் ...
              எந்த தெய்வம் இவரை புலிவேஷம் போடச் சொன்னது ?ஆடுகளை பல்லால் கவ்வி எறியச்சொன்னது ?இப்படி மூடச் செயல்களை செய்து கொண்டு இவரைப் போன்றவர்கள் வாழ்வதை விட போய் சேர்வதே நல்லது என தோன்றுகிறது !



6 comments:

  1. இது போன்ற மூடநம்பிக்கைகள் உள்ளவரை நம் சமூகமும், நாடும் என்றுமே உருப்படப் போவதில்லை. இந்த மாதிரி புலிகள் நிறையவே வெளில நடமாடிக் கொண்டுதானே இருக்கு? அந்தப் புலிகளை எல்லாம்?????!! பூனைக்கு யாரய்யா மணி கட்டுவது? !

    ReplyDelete
    Replies
    1. இரண்டு கால் புலிகள் மட்டுமல்ல ,குரங்குகளும் ,யானைகளும் ஊருக்குள்ளே நடமாடிக்கிட்டுதான் இருக்கு ...
      பூனைக்கு யார் மணி கட்டுவதென்பது எலிகள் பட வேண்டிய கவலை .நமக்கெதற்கு ?
      நன்றி துளசிதரன் ஜி !

      Delete
  2. நல்ல பதிவு!
    தமிழ்மணம் பிளஸ் +1 வோட்டு போட்டாச்சு!
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இப்படிப் பட்ட முட்டாள் தனங்களை ஊசிக் குத்தி ஒழிக்க முடியுமா ,சொல்லுங்க டாக்டர் !
      நன்றி நம்பள்கி!

      Delete
  3. இவர்கள் எல்லாம் தானாக தான் திருந்த வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. திருந்தாத இதயங்கள் இருந்தென்ன லாபம் என்று வேண்டுமானால் பாடிக் கொள்ளலாம் !
      நானே தனபாலன் ஜி !

      Delete