2 October 2013

'குல தெய்வம்' லாலுவை பழி வாங்கி விட்டதா ?

பசு மாட்டை தெய்வமாய் வணங்க வேண்டிய 'யாதவ் '...
அதற்கு போட வேண்டிய தீவன கணக்கிலேயே ஊழல் செய்ய ...
'நின்று கொல்லவேண்டிய  தெய்வம் 'கூட நிற்காமல் ...
 அவரை ஜெயிலில் தள்ளி இருக்கிறது ...
செய்வது தெய்வ குற்றம் என எண்ணிப் பார்க்காததால் ...
ஜெயில் கம்பிகளை எண்ணிக் கொண்டு இருக்கிறார் !
தண்டனை விபரம் கிடைத்த பின் அப்பீல் பண்ண இருக்கிறாராம் ...
அப்பவும் பீல் பண்ணுவதாக தெரியவில்லை !

10 comments:

  1. திருந்தாத ஜென்மங்கள்...

    ReplyDelete
    Replies
    1. மக்கள் திருந்தாத வரை இவர்களும் திருந்த மாட்டார்கள் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்... பறப்பதற்கு தயாராக இருங்கள்...!

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

    ReplyDelete
    Replies
    1. பாரா சூட்டுடன் தயாராய் இருக்கிறேன் !
      தகவலுக்கு நன்றி தனபாலன் ஜி !

      Delete
  3. ரைட்டு.....

    பீல் பண்றமாதிரி இருந்தா ஏங்க தப்பு பண்றாங்க....

    ReplyDelete
    Replies
    1. அது சரி ,'நல்ல மாட்டுக்கு ஒரு சூடு' ங்கிற நம்ம பழமொழி அவருக்கு தெரிந்து இருக்கவா போவுது ?
      நன்றி சௌந்தர் ஜி !

      Delete
  4. அடடா.... ரொம்பவே ஃபீல் பண்ணறாரே....

    சீக்கிரமே வெளியே வந்துடுவார். இதெல்லாம் இவங்களுக்கு அரசியல் ஆதாயம் தேடித்தரும்.... என்னவோ நாட்டு சுதந்திரத்துக்காக ஜெயிலுக்கு போன மாதிரி பீலா விடுவாங்க!

    ReplyDelete
    Replies
    1. ஜெயிலுக்கு போய் வரும்போதும் ,வெளி நாட்டுக்கு போய்வருவதைப் போல் கை ஆட்டுவார்கள் ..நமக்கெல்லாம் பத்திக்கிட்டு வரும் !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  5. பீல் பண்ணும் அரசியல் வாதி எங்குமே இல்லை! அப்படியிருந்தால் , அவர் அரசியல் வாதி யில்லை!

    ReplyDelete
    Replies
    1. அவர் பீல் பண்ண மாட்டார் ,மக்கள்தான் பண்ண வைக்கணும் !
      நன்றி அய்யா !

      Delete