21 October 2013

படுக்கைமேல் இவருக்கு பிடித்த காரியம் !

அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடைப் பிடிப்பான் என்பதை நிரூபித்துள்ளார் ...
திரிபுரா மாநில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சமர் ஆசார்ஜி என்பவர் !

அவர் செய்தது ,இருபது லட்ச ரூபாயை படுக்கையில் அடுக்கி ,அதன் மீது புரண்டு புரண்டு செல்போன் மூலம் வீடியோ வேறு எடுத்துக் கொண்டுள்ளார் ...
அவரது நண்பர் மூலமாகவே அந்த வீடியோ வலையுலகில் வெளியாகிவிட்டது ...
அவர் பேட்டியில் சொல்கிறார் ...
'இது எனது நீண்ட நாள் ஆசை,மற்ற தலைவர்கள் போல் நான் மறைக்க விரும்பவில்லை '!
கழிவறைக்குப் போகவே காசில்லாத பல கோடி ஏழைகள் வாழும் நாட்டில் ...
இவரைப் போன்றவர்கள் கழிவறைக் கட்டியே கோடிக் கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள்!


13 comments:

  1. Replies
    1. சாதா மழையில்லே.அடைமழை !
      நன்றி குமார் ஜி !

      Delete
  2. Replies
    1. இந்த பாவிங்கதான் ஏழை பங்காளன்னு வேஷம் போடுறாங்க !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  3. படுபாவிங்க என்ன செய்யலாம் இவர்களை...

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் கட்டிய கழிவறையிலே தள்ளி பூட்டிவிட வேண்டியதுதான் !
      நன்றி சௌந்தர் ஜி !

      Delete
  4. Replies
    1. நம்ம ஜனநாயக நாட்டிலே இப்படி நிறைய கொடுமைகள் நடந்துகிட்டு இருக்கே !
      நன்றி ராஜி மேடம் !

      Delete
  5. Replies
    1. விபரீத ஆசையின் விளைவு ,அவர் கட்சியில் இருந்து நீக்கப் பட்டு உள்ளார் ..இதனால் மக்களுக்கு என்ன நன்மை ?அவர் கொள்ளை அடித்ததற்கு கம்பி அல்லவா என்ன வேண்டும் ?இன்னும் கரன்சியை அல்லவா எண்ணிக் கொண்டு இருக்கிறார் ?
      நன்றி கருண் ஜி !

      Delete
  6. அது என்ன ”மேனியா” என்று தெரியவில்லை. இன்னும் எத்தனை பேர் இன்னும் என்னென்ன செய்து கொண்டு இருக்கிறார்களோ தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இன்றைய இரண்டு செய்தியைப் படித்தாலே ஆச்சரியமாக இருக்கிறது ...
      சின்னப் பசங்களுடன் வக்கிர உறவு கொண்ட வங்கி அதிகாரி ,ஆறு பசங்களால் கொலை செய்யப் பட்டுள்ளார் !
      கோடிக்கணக்கில் ஊழல் பேரத்தில் ஈடுபட்ட வீட்டு வசதி வாரிய அதிகாரி அலுவலகத்தில் தூக்கில் தொங்கினார் !
      நன்றி தமிழ் இளங்கோ அவர்களே !

      Delete
  7. இவர் அல்லவோ
    உண்மையான தோழர் ?
    இன்னும் என்ன என்ன ஆசை வைத்திருக்கிறோரோ ?

    ReplyDelete