26 January 2014

குடியரசு ஆனதன் பலன் அனுபவிக்கிறவங்க யார் ?

''தலைவர்  அறிக்கை விடும் போது மப்புலே இருந்த மாதிரி தெரியுதுன்னு ஏன் சொல்றே ?''
''குடிஅரசு ஆனதின் முழுபலனை  நமது மாநில மக்கள்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும்வண்ணம்,இன்று ஒவ்வொரு டாஸ்மாக் கடை வாசலிலும்  தேசீயக் கொடி ஏற்றவிருப்பதால் 'குடி 'மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு சொல்லி இருக்காரே !''

11 comments:

  1. 'குடி'யரசு தின நல்வாழ்த்துக்கள் - என்று 'தலைவர்' சொல்கிறார்...? கொடுமை...!

    ReplyDelete
    Replies
    1. நாடு முன்னேற்றப் பாதையில் போகும் லட்சணம் இதுதான் !
      நன்றி

      Delete
  2. குடியரசு தின நல்வாழ்த்து

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா !

      Delete
  3. நல்ல தலைவர்! நல்ல ‘குடி’மக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கொடி ஏற்றிவிட்டு மிட்டாய்க்கு பதிலாய் ஊறுகாய் கொடுத்தாராமே !
      நன்றி

      Delete
  4. "குடி "மக்களுக்கான தலைவர்
    இப்படித்தானே பேசுவார்

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்தவங்களுக்கு ஒண்ணுக்குஒண்ணு பிரீயாமே !
      நன்றி

      Delete
  5. நல்லா விளங்கிடும்! இப்ப எல்லா விழாகளுமே குடியில்தானே ஆரம்பம், முடிவதும்!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. குடிக்காதவன் எவன்னே கண்டு பிடிக்க முடியலே !
      நன்றி

      Delete