9 January 2014

ஒண்ணு மட்டும் கொடுத்தா போதுமா ?இன்னொண்ணு ?

''நீங்க தொழில்  தொடங்க கொடுத்த  பெட்டிசனுக்கு பதிலே இல்லைன்னு மந்திரிகிட்டே  கேட்டதுக்கு என்ன  சொன்னார் ?''
''பெட்டிசன் வந்திருச்சு ,பெட்டி வரலேயேன்னு கேக்கிறார் !''

21 comments:

  1. கண்ணும் கருத்துமா இருக்கார்..

    ReplyDelete
    Replies
    1. இல்லாட்டி மந்திரியா நீடிக்க முடியுமா ?
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா.....

    மிக நன்றாக உள்ளது... நகைச்சு
    வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நாட்டு நடப்புதான் சரியில்லே ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  3. கேக்கிறதில் என்ன தப்பா ?
    நன்றி

    ReplyDelete
  4. Replies
    1. US ல் இப்படி பெட்டிகேக்கும் பழக்கம் உண்டான்னு சொல்லுங்க !
      நன்றி

      Delete
  5. Replies
    1. இதுக்குத்தான் மனுன்னு சொல்லாம ,'பெட்டி'சன்னு அழுத்தமா சொல்றாங்க போலிருக்கே !
      நன்றி

      Delete
  6. அதானே! வரவேண்டியது முதல்ல வல்லென்னா வழி பிறக்குமா!

    ReplyDelete
    Replies
    1. வலி வந்துதானே பிள்ளை பிறக்கும்னு டாக்டர் நம்பள்கி சொல்லாமலே எல்லோருக்கும் தெரிந்த விசயம்தானே ?
      நன்றி

      Delete
  7. காரியத்தில் கண்ணாயிருப்பார் போலவே!

    ReplyDelete
    Replies
    1. மந்திரியா ஆனதே இதுக்குதானே ?
      நன்றி

      Delete
  8. அவர்தான் மந்திரி

    ReplyDelete
    Replies
    1. பெட்டி வாங்கி மாத்தி விடறவர் ?
      நன்றி

      Delete
  9. பெட்டிஷனுக்குள்ளே பெட்டி இருக்குன்னு சொல்லி இருக்கலாமோ!

    ReplyDelete
    Replies
    1. மலையாள மந்திரியா இருந்தா ...'பட்டியும் தான் இருக்கு ,போடா பட்டி' ன்னு திட்டி அனுப்பியிருப்பார் !
      நன்றி

      Delete
  10. பெட்டில என்ன இருக்கணும்னு கண்டிசன் போட்ற அவர் ஒரு சிடிசன். குடுக்காட்டி அடிக்க வருவான் பத்து மனுசன்.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. அவர் நெற்றியிலே பொட்டுன்னு போடவும் வருவான் துப்பாக்கியோட ஒரு 'சிட்டிசன்'!
      நன்றி

      Delete